Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
புலம்பல் 3:19-26

19 கர்த்தாவே, நான் மிகவும் வருத்தமாய் இருக்கிறேன் என்னை நினைத்தருளும்.
    எனக்கு வீடு இல்லை.
    நீர் எனக்குக் கொடுத்த கசப்பான விஷத்தை (தண்டனையை) நினைத்துப்பாரும்.
20 நான் எனது எல்லாத் துன்பங்களையும் நினைத்துப் பார்க்கிறேன்.
    நான் மிகவும் துக்கமாய் இருக்கிறேன்.
21 ஆனால் பிறகு, ஏதோ சிலதைப் பற்றி நினைக்கிறேன்.
    பின்னர் நான் நம்பிக்கை பெறுகிறேன்.
    நான் என்ன நினைக்கிறேன் என்பது இதுதான்:
22 கர்த்தருடைய அன்பு மற்றும் கருணைக்கு முடிவில்லை.
    கர்த்தருடைய இரக்கம் எப்பொழுதும் முடிவதில்லை.
23 ஒவ்வொரு காலையிலும் அவர் அதை புதிய வழிகளில் காண்பிக்கிறார்!
    கர்த்தாவே, உமது உண்மையும், பற்றுதலும் மிகப் பெரியது!
24 நான் எனக்குள், “கர்த்தரே எனது தேவனாயிருக்கிறார்,
    ஆகவே நான் அவரை நம்புவேன்” என்கிறேன்.

25 கர்த்தர் தனக்காகத் காத்திருக்கும் ஜனங்களுக்கு நல்லவராய் இருக்கிறார்.
    கர்த்தர் அவரைத் தேடும் ஜனங்களுக்கு நல்லவராய் இருக்கிறார்.
26 ஒருவன் தன்னை இரட்சித்துக்கொள்ள
    கர்த்தருக்காக அமைதியாகக் காத்திருப்பது நல்லது.

புலம்பல் 1:7-15

எருசலேம் பின்னோக்கி நினைத்துப் பார்க்கிறாள்.
எருசலேம் தான் பாதிக்கப்பட்டு
    தன் வீடுகளை இழந்த காலத்தை நினைக்கிறாள்.
அவள் கடந்த காலத்தில் தான் பெற்றிருந்த
    இனிய காரியங்களை எண்ணிப் பார்க்கிறாள்.
அவள் பழைய நாட்களில் பெற்ற
    சிறந்தவற்றை நினைத்துப் பார்க்கிறாள்.
அவள் தனது ஜனங்கள் எதிரிகளால் சிறை பிடிக்கப்பட்டதை
    எண்ணிப் பார்க்கிறாள்.
அவள் தனக்கு உதவ எவரும் இல்லாத
    நிலையை எண்ணுகிறாள்.
அவளை அவளது பகைவர்கள் பார்க்கும்போது சிரித்தார்கள்.
    ஏனென்றால், அவள் அழிக்கப்பட்டாள்.
எருசலேம் மிக மோசமான பாவங்களைச் செய்தாள்.
    எருசலேம் பாவம் செய்ததால்,
    அவள் அழிக்கப்பட்ட நகரமானாள்.
ஜனங்கள் அவளது நிலையைக் கண்டு தங்களின் தலைகளை அசைத்து மறுதலிக்கிறார்கள்.
    கடந்த காலத்தில் ஜனங்கள் அவளை மதித்தனர். இப்போது ஜனங்கள் அவளை வெறுக்கின்றனர்.
ஏனென்றால், அவர்கள் அவளை அவமானப்படுத்தினார்கள்.
    எருசலேம் பெருமூச்சுவிட்டு பின்னிட்டுத் திரும்பினாள்.
எருசலேமின் ஆடைகள் அழுக்காயின.
    அவளுக்கு என்ன நிகழப்போகிறது என்பதைப் பற்றி அவள் எண்ணிப் பார்க்கவில்லை.
பார் நான் எப்படி காயப்பட்டேன்! அவளது வீழ்ச்சி அதிசயமானது.
    அவளுக்கு ஆறுதல் சொல்ல எவருமில்லை.
“கர்த்தாவே! நான் எவ்வாறு காயப்பட்டேன் என்பதைப் பாரும்.
    எனது பகைவன் தன்னை எவ்வளவு பெரியவனாக நினைக்கிறான் என்பதைப் பாரும்!” என்று சொன்னாள்.

10 பகைவன் தனது கையை நீட்டினான்.
    அவன் அவளது இன்பமான அனைத்தையும் எடுத்துக் கொண்டான்.
உண்மையில், அவள் தனது ஆலயத்திற்குள் அயல்நாட்டவர்கள் நுழைவதைப் பார்த்தாள்,
    கர்த்தாவே, அந்த ஜனங்கள் எங்கள் சபையில் சேரமுடியாது என்று நீர் சொன்னீர்!
11 எருசலேமின் அனைத்து ஜனங்களும் தவிக்கிறார்கள்.
    அவர்கள் உணவுக்காக அலைகிறார்கள்.
    அவர்கள் தங்கள் நல்ல பொருட்களை உணவுக்காக மாற்றிக் கொண்டார்கள்.
    அவர்கள் உயிர் வாழ்வதற்காக இவற்றைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.
எருசலேம் சொல்கிறது: “கர்த்தாவே என்னைப் பாரும்!
    ஜனங்கள் என்னை எப்படி வெறுக்கிறார்கள் பாரும்.
12 சாலை வழியாகக் கடந்து செல்லும் ஜனங்களே,
    நீங்கள் எனக்காக கவலைப்படுகின்றவர்களாக தெரியவில்லை.
ஆனால் என்னைப் பாருங்கள்.
    எனது வலியைப்போன்று வேறுவலி உண்டோ?
    எனக்கு வந்திருக்கிற வலியைப்போன்று வேறுவலி இருக்கிறதா?
கர்த்தர் என்னைத் தண்டித்திருக்கிறது போன்றவலி வேறு உள்ளதோ?
    அவர் தனது பெருங்கோபமான நாளில் என்னைத் தண்டித்திருக்கிறார்.
13 கர்த்தர் மேலிருந்து நெருப்பை அனுப்பினார்,
    அந்த நெருப்பு எனது எலும்புகளுக்குள் சென்றது.
அவர் எனது கால்களுக்கு வலையை விரித்தார்.
    என்னைப் பின்னிட்டு விழப்பண்ணினார்.
என்னைப் பாழ்நிலமாகப் பண்ணினார்.
    நாள் முழுவதும் நான் நோயுற்றிருந்தேன்.

14 “எனது பாவங்கள் நுகத்தைப்போன்று கட்டப்பட்டுள்ளது,
    எனது பாவங்கள் கர்த்தருடைய கைகளில் கட்டப்பட்டுள்ளது.
கர்த்தருடைய நுகம் என் கழுத்தில் இருக்கிறது.
    கர்த்தர் என்னை பலவீனமாக்கியுள்ளார்.
நான் எதிர்த்து நிற்க முடியாதபடி
    கர்த்தர் என்னை ஒடுக்குகிற ஜனங்களின் கையில் கொடுத்திருக்கிறார்.
15 கர்த்தர் எனது பலமான படை வீரர்களை மறுத்துவிட்டார்.
    அவ்வீரர்கள் நகரத்திற்குள்ளே இருந்தனர்.
பிறகு கர்த்தர் ஒரு ஜனக்குழுவை எனக்கு எதிராக கொண்டு வந்தார்.
    என்னுடைய இளம் வீரர்களைக் கொல்வதற்காக அவர்களைக் கொண்டு வந்தார்.
கர்த்தர் ஆலைக்குள்ளே திராட்சைப் பழங்களை மிதிப்பதுபோல
    யூதா குமாரத்தியாகிய கன்னிகையை மிதித்தார்.

மத்தேயு 20:29-34

இரண்டு குருடர்களை இயேசு குணமாகுதல்(A)

29 இயேசுவும் அவரது சீஷர்களும் எரிகோவைவிட்டுச் சென்றபொழுது, ஏராளமான மக்கள் இயேசுவைப் பின்தொடர்ந்தார்கள். 30 சாலையோரம் அமர்ந்திருந்த இரு குருடர்கள், இயேசு வந்து கொண்டிருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்டு,, “ஆண்டவரே, தாவீதின் மகனே, எங்களுக்கு உதவுங்கள்” என்று உரக்கக் கூவினார்கள்.

31 அனைவரும் அக்குருடர்களைக் கடிந்து கொண்டார்கள், அவர்களை அமைதியாயிருக்கக் கூறினார்கள். ஆனால், அக்குருடர்களோ மேலும் மேலும் சத்தமாக,, “ஆண்டவரே, தாவீதின் மகனே, எங்களுக்கு உதவுங்கள்” என்று கூவினார்கள்.

32 இயேசு நின்று, அக்குருடர்களைப் பார்த்து,, “உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்.

33 அதற்குக் குருடர்கள்,, “ஆண்டவரே, நாங்கள் பார்வை பெற வேண்டும்” என்றார்கள்.

34 அவர்கள் மேல் இயேசு மிகவும் இரக்கம் கொண்டார். இயேசு அவர்களது கண்களைத் தொட்டார். அவர்கள் இருவரும் பார்வை பெற்றார்கள். பின்னர் அவர்கள் இருவரும் இயேசுவைப் பின்தொடர்ந்தார்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center