Revised Common Lectionary (Semicontinuous)
தாவீதின் பாடல்
25 கர்த்தாவே, நான் என்னை உமக்கு அளிக்கிறேன்.
2 என் தேவனே, நான் உம்மை நம்புகிறேன். நான் வெட்கப்பட்டுப் போகமாட்டேன்.
என் பகைவர்கள் என்னைக் கண்டு நகைப்பதில்லை.
3 ஒருவன் உம்மை நம்பினால் அவன் வெட்கப்பட்டுப் போகமாட்டான்.
ஆனால் வஞ்சகர் ஏமாந்து போவார்கள்.
அவர்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை.
4 கர்த்தாவே, உமது வழிகளைக் கற்றுக் கொள்ள உதவும்.
உமது வழிகளை எனக்குப் போதியும்.
5 எனக்கு வழிகாட்டி உமது உண்மைகளைப் போதியும்.
நீரே என் தேவன், என் மீட்பர்.
அனுதினமும் நான் உம்மை நம்புகிறேன்.
6 கர்த்தாவே, என்னிடம் தயவாயிருக்க நினைவு கூரும்.
எப்போதுமுள்ள உமது மென்மையான அன்பை எனக்குக் காட்டும்.
7 எனது பாவங்களையும் என் சிறுவயதின் தீய செயல்களையும் நினைவில் கொள்ளாதேயும்.
கர்த்தாவே, உமது நல்ல நாமத்திற்கேற்ப, என்னை அன்பிலே நினைத்தருளும்.
8 கர்த்தர் உண்மையாகவே நல்லவர்.
பாவிகளுக்கு வாழ்வதற்குரிய வழியை அவர் போதிக்கிறார்.
9 தாழ்மைப்பட்டவர்களுக்கு அவர் தம் வழியைப் போதிக்கிறார்.
அவர் அந்த ஜனங்களை நியாயமாக நடத்துகிறார்.
10 அவரது உடன்படிக்கையையும், வாக்குறுதிகளையும் பின்பற்றும் ஜனங்களுக்குக்
கர்த்தர் தயவுள்ளவரும், உண்மையுமானவர்.
26 அவர்கள் உமக்கு எதிராகத் திரும்பினார்கள்!
அவர்கள் உமது போதனைகளைத் தூர எறிந்தனர்!
அவர்கள் உமது தீர்க்கதரிசிகளைக் கொன்றனர்.
அத்தீர்க்கதரிசிகள் மக்களை எச்சரித்தனர்.
அவர்களை உம்மிடம் திரும்பக் கொண்டுவர அவர்கள் முயற்சித்தனர்.
ஆனால் எங்களது முற்பிதாக்கள் உங்களுக்கு எதிராக அக்கிரமம் செய்தனர்!
27 எனவே அவர்களைத் தம் பகைவர்கள் கைக்கொள்ளவிட்டீர்.
பகைவர்களுக்குத் துன்பங்களைக் கொடுத்தனர்.
துன்பம் வந்ததும், முற்பிதாக்கள் உம்மை உதவிக்கு அழைத்தனர்.
பரலோகத்தில் நீர் கேட்டீர்.
நீர் மிகவும் இரக்கமுடையவர்.
எனவே அவர்களைக் காக்க ஜனங்களை அனுப்பினீர்.
அந்த ஜனங்கள் அவர்களைப் பகைவரிடமிருந்து காத்தனர்.
28 பிறகு இளைப்பாறுதல் பெற்ற உடனேயே
எங்கள் முற்பிதாக்கள் உமக்கு முன் மீண்டும் பொல்லாப்புகளைச் செய்யத் தொடங்கினார்கள்!
எனவே அவர்களைப் பகைவர் தோற்கடித்து தண்டிக்கும்படி விட்டுவிட்டீர். அவர்கள் உம்மை உதவிக்கு அழைத்தனர்.
பரலோகத்திலிருந்து நீர் அதனைக் கேட்டு அவர்களுக்கு உதவினீர்.
நீர் மிகவும் இரக்கமுள்ளவர்!
அது பலதடவை நிகழ்ந்தது.
29 நீர் அவர்களை எச்சரித்தீர்.
அவர்களை மீண்டும் வரும்படி சொன்னீர்.
ஆனால் அவர்கள் அகங்காரம் கொண்டனர்.
அவர்கள் உமது கட்டளையைக் கேட்க மறுத்தனர்.
ஜனங்கள் உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தால் பிறகு அவர்கள் உண்மையில் வாழ்வார்கள்.
ஆனால் எங்கள் முற்பிதாக்கள் உமது சட்டங்களை மீறினார்கள்.
அவர்கள் பிடிவாதமானவர்கள்.
அவர்கள் தமது முதுகை உமக்குத் திருப்பினார்கள்.
அவர்கள் கவனிக்க மறுத்தனர்.
30 “நீர் எங்கள் முற்பிதாக்களோடு மிகப் பொறுமையாய் இருந்தீர்.
பல ஆண்டுகள் உம்மிடம் தவறாக நடந்தனர்.
உமது ஆவியினால் அவர்களை எச்சரித்தீர்.
நீர் அவர்களை எச்சரிக்க தீர்க்கதரிசிகளை அனுப்பினீர்.
ஆனால் எங்கள் முற்பிதாக்கள் கவனிக்கவில்லை.
எனவே நீர் அவர்களை அந்நியர்களிடம் ஒப்புக்கொடுத்தீர்.
31 “ஆனால் நீர் மிகவும் இரக்கமுடையவர்!
நீர் அவர்களை முழுமையாக அழிக்கவில்லை.
நீர் அவர்களை கைவிடவும் இல்லை.
நீர் இத்தகைய இரக்கமும் கருணையும் கொண்ட தேவன்!
எருசலேமின் அழிவு(A)
20 “எருசலேமைச் சுற்றிலும் படைகள் சூழ்ந்திருக்கக் காண்பீர்கள். எருசலேமின் அழிவு காலம் நெருங்கிவிட்டது என்பதை அப்போது அறிந்துகொள்வீர்கள். 21 அப்போது யூதேயாவின் மக்கள் மலைகளுக்கு ஓடிச் செல்லவேண்டும். எருசலேம் மக்கள் விரைந்து செல்லவேண்டியதிருக்கும். நீங்கள் எருசலேம் நகருக்கு வெளியே இருக்கிறவர்கள், உள்ளே போகாதீர்கள். 22 தேவன் தம் மக்களைத் தண்டிக்கும் காலத்தைக் குறித்துத் தீர்க்கதரிசிகள் நிரம்ப செய்திகளை எழுதி இருக்கிறார்கள். நான் உங்களுக்குச் சொல்லிக்கொண்டிருப்பதெல்லாம் இவை எல்லாம் நிகழவேண்டிய காலத்தைக் குறித்தாகும். 23 அந்த நேரம் கருவுற்ற பெண்களுக்கும் பாலூட்டவேண்டிய சின்னஞ் சிறு குழந்தைகளை உடைய பெண்களுக்கும் மிகவும் கொடுமையானதாக இருக்கும். ஏன்? இந்தப் பூமியில் மிகக் கொடுமையான காலம் வரும். இந்த மக்களிடம் (யூதர்களிடம்) தேவன் சினம் கொள்வார். 24 வீரர்களால் சிலர் கொல்லப்படுவார்கள். பிறர் கைதிகளாக்கப்பட்டு ஒவ்வொரு தேசத்திற்கும் கொண்டு செல்லப்படுவார்கள். தூய பட்டணமாகிய எருசலேமில் யூதரல்லாத மக்கள் அவர்கள் காலம் முடியும்மட்டும் நடந்து செல்வார்கள்.
2008 by World Bible Translation Center