Add parallel Print Page Options

தேவன் வந்துகொண்டிருக்கிறார்

60 “எருசலேமே! என் வெளிச்சமே! எழு!
    உனது வெளிச்சம் (தேவன்) வந்துகொண்டிருக்கிறது.
    கர்த்தருடைய மகிமை உன் மேல் ஒளிவீசும்.
இப்போது பூமியை இருள் மூடியிருக்கிறது.
    ஜனங்கள் இருளில் உள்ளனர்.
ஆனால் கர்த்தர் உன்மேல் ஒளிவீசுகிறார்.
    அவரது மகிமை உன்மேல் தோற்றம் தரும்.
தேசங்கள், உனது வெளிச்சத்திடம் (தேவன்) வரும்.
    அரசர்கள், உனது பிரகாசமான வெளிச்சத்திடம் வருவார்கள்.
உன்னைச் சுற்றிப் பார்!
    ஜனங்கள் ஒன்றுகூடி உன்னிடம் வந்துகொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் உனது மகன்கள், வெகு தொலைவிலிருந்து வருகிறார்கள்.
    உனது மகள்களும் அவர்களோடு வருகிறார்கள்.

“இது எதிர்காலத்தில் நடைபெறும்.
    அப்போது, நீ உனது ஜனங்களைக் காண்பாய். உனது முகம் மகிழ்ச்சியுடன் பிரகாசிக்கும்.
முதலில் நீ பயப்படுவாய்!
    ஆனால் பிறகு நீ கிளர்ச்சியடைவாய்.
கடல்களைத் தாண்டி வரும் ஜனங்களின் கூட்டம் உன் முன் இருக்கும்.
    பலநாட்டு ஜனங்களும் உன்னிடம் வருவார்கள்.
மீதியான் ஏப்பாத் நாடுகளில் உள்ள ஒட்டகக் கூட்டங்கள் உனது நாட்டைக் கடக்கும்.
    சேபாவிலிருந்து நீள வரிசையாக ஒட்டகங்கள் வரும்.
அவர்கள் பொன்னையும் நறுமணப் பொருட்களையும் கொண்டுவருவார்கள்.
    ஜனங்கள் கர்த்தரைத் துதித்துப் பாடுவார்கள்.

Read full chapter