Add parallel Print Page Options

人必须重生

有一个法利赛人,名叫尼哥德慕,是犹太人的官长。 他夜间来到耶稣那里,对他说:“拉比,我们知道你是从 神那里来的教师,因为如果没有 神同在,你所行的这些神迹,就没有人能行。” 耶稣回答:“我实实在在告诉你,人若不重生,就不能见 神的国。” 尼哥德慕说:“人老了,怎能重生呢?难道他能再进母腹生出来吗?” 耶稣回答:“我实实在在告诉你,人若不是从水和圣灵生的,就不能进 神的国。 从肉身生的就是肉身,从灵生的就是灵。 你不要因为我对你说‘你们必须重生’而感到希奇。 风随意而吹,你听见它的响声,却不知道它从哪里来,往哪里去;凡从圣灵生的,也是这样。” 尼哥德慕说:“怎能有这事呢?” 10 耶稣说:“你是以色列人的教师,还不明白这事吗? 11 我实实在在告诉你,我们知道的,才讲论;见过的,就作证,然而你们却不接受我们的见证。 12 我对你们讲地上的事,你们尚且不信,如果讲天上的事,怎能相信呢? 13 除了那从天上降下来的人子(有些抄本作“除了那从天上降下来仍旧在天上的人子”),没有人升过天。 14 摩西在旷野怎样把铜蛇举起,人子也必照样被举起来, 15 使所有信他的人都得永生。

16 “ 神爱世人,甚至把他的独生子赐给他们,叫一切信他的,不至灭亡,反得永生。 17 因为 神差他的儿子到世上来,不是要定世人的罪,而是要使世人借着他得救。 18 信他的,不被定罪;不信的,罪已经定了,因为他不信 神独生子的名。 19 光来到世上,世人因为自己的行为邪恶,不爱光倒爱黑暗,定他们罪的原因,就在这里。 20 凡作恶的都恨光,不来接近光,免得他的恶行暴露出来。 21 凡行真理的,就来接近光,好显明他所作的都是靠着 神而作的。”

他必兴旺,我必衰微

22 这事以后,耶稣和门徒来到犹太地,他和他们住在那里,并且施洗。 23 约翰也在靠近撒冷的艾嫩施洗,因为那里水多;众人都去受洗。 24 那时约翰还没有入狱。 25 约翰的门徒和一个犹太人为洁净礼发生辩论。 26 他们来到约翰那里,对他说:“拉比,你看,从前和你在约旦河东,你为他作见证的那一位,他也在施洗,众人都到他那里去了。” 27 约翰回答:“除了从天上赐下来给他的,人就不能得到甚么。 28 你们自己可以为我作证:我曾说,我不是基督,不过是奉差遣作他的先锋的。 29 娶新娘的是新郎。新郎的好友站在那里听着,听见新郎的声音就非常喜乐。因此,我这喜乐满溢了! 30 他必兴旺,我必衰微。

从天上来的

31 “那从天上来的,是在万有之上;从地上来的,是属于地,所讲的也是属于地。那从天上来的,是超越万有之上。 32 他把所见所闻的见证出来,可是没有人接受他的见证。 33 那接受他的见证的,就确认 神是真的。 34  神所差来的那一位讲 神的话,因为 神把圣灵无限地赐给他。 35 父爱子,已经把万有交在他手里。 36 信子的,有永生;不信从子的,必不得见永生, 神的震怒却常在他身上。”

耶稣与尼哥底母

有个法利赛人,名叫尼哥底母,他是犹太人的一位首领。 夜里,他来见耶稣,说∶“拉比(老师),我们知道您是来自上帝的老师,因为假如上帝不与您同在,没人能行您行的神迹。”

耶稣回答道∶“我实话告诉你,如果一个人不重生,就不能在上帝的王国占有一席之地。”

尼哥底母说∶“一个人老了,怎么能重生呢?他自然不可能第二次投胎再生了!”

耶稣回答说∶“我实话告诉你,如果一个人不从水和灵中出生,他就不能进入上帝的王国; 从肉体出生的是肉体;从灵出生的是灵。 所以,当我告诉你∶‘你们必须重生’时,你不必感到奇怪。 风任随它意吹拂,你可以听到风声,却不知它从哪儿来,到哪儿去。由圣灵所生的人也是如此。”

尼哥底母问∶“怎么会是这样的呢?”

10 耶稣回答说∶“你是以色列人的老师,难道你也不明白吗? 11 我实话告诉你,我们说的是我们知道的,我们讲的是我们所见的,但是你们却不接受我们的证言。 12 我告诉你们尘世上的事情,你们不相信,那么,如果我告诉你们天上的事情,你们又怎么能相信呢? 13 除了从天降临的那位-人子之外,没有人升过天。

14 正如摩西在旷野里举起蛇一样,人子也必照样被举起, 15 目的是让所有信仰他的人得到永生。”

16 因为,上帝非常爱世人,他甚至献出了自己唯一的儿子,以便使每一个信仰他(儿子)的人不会灭亡,而获永生。 17 上帝派他的儿子到世上来,不是为了给世人定罪,而是要通过他使世人得到拯救。 18 凡是信仰他的人,都不会被定罪,不信仰他的人已被定罪,因为他们不信仰上帝唯一的儿子。 19 定罪的事实是:光明已来到这个世界,可是人们却情愿要黑暗,而不要光明,因为他们做的事是邪恶的。 20 凡是干坏事的人都憎恨光明。他不到光明里来,免得他的劣迹被暴露。 21 但是,那些遵循真理的人到光明里来,光明使他们通过上帝做过的工作显示的清清楚楚。 [a]

耶稣与施洗者约翰

22 此后,耶稣和门徒们来到犹太地区,他在那里和他们共度时光,为人们施洗礼。 23 约翰在撒冷附近的哀嫩也为人们施洗礼,因为那里水很多。人们不断地来到约翰那里,接受洗礼, 24 (那时,约翰还没有被关进监狱。)

25 当时,约翰的门徒和一个犹太人针对洁净仪式一事发生了争论, 26 他们来到约翰那里,对他说∶“拉比(老师),从前在约旦河对岸和您在一起的那个人,也就是您为他作证的那个人,现在正给人们施洗礼呢,人们都纷纷到他那里去了。”

27 约翰回答说∶“除非上天所赐,否则,人不会领受到任何事情。 28 你们自己可以证明我说过∶‘我不是基督,我只不过是在他之前被派来的。’ 29 和新娘结婚的是新郎,但是,新郎的傧相等在那里,倾听新郎的动静。他一听见新郎的的声音,就非常高兴。我现在充满了快乐, 30 他必须变得越来越伟大,我必须变得越来越渺小。”

来自天上的那位

31 “来自天上的他高于一切,来自尘世的属于尘世,他所说的一切也都来自尘世。但是来自天堂的他高于一切。

32 他证明了自己的所见所闻,但是,却没有人愿意接受他的见证。 33 接受基督见证的人证明了上帝是真实的。 34 因为上帝派来的他(耶稣),说上帝说的话。上帝赐给他的灵 [b]是无限的。 35 父爱他的儿子,把一切都交到了他的手中。 36 信仰圣子的人得以永生,不服从圣子的人将看不到永生,相反,上帝的愤怒会始终伴随着他。

Footnotes

  1. 約 翰 福 音 3:21 一些学者认为十六至二十一节是耶稣说的话,而有些学者却认为是约翰写的。
  2. 約 翰 福 音 3:34 灵: 圣灵。

இயேசுவும் நிக்கொதேமுவும்

நிக்கொதேமு என்று ஒரு மனிதன் இருந்தான். அவன் பரிசேயர்களுள் ஒருவன். அவன் ஓர் முக்கியமான யூதத் தலைவன். ஓர் இரவு அவன் இயேசுவிடம் வந்தான். “போதகரே! நீங்கள் தேவனிடமிருந்து அனுப்பப்பட்டவர் என்பதை நாங்கள் அறிவோம். தேவனின் உதவியின்றி எவரொருவராலும் நீர் செய்வதுபோன்ற அற்புதங்களைச் செய்ய இயலாது” என்று சொன்னான்.

அதற்கு இயேசு, “நான் உனக்கு உண்மையைக் கூறுகிறேன். ஒருவன் மீண்டும் பிறக்கவேண்டும். இல்லாவிட்டால் அவன் தேவனுடைய இராஜ்யத்தில் இடம்பெற முடியாது” என்று கூறினார்.

அதற்கு நிக்கொதேமு, “ஆனால் ஒரு மனிதன் ஏற்கெனவே முதியவனாக இருந்தால் அவன் எப்படி மீண்டும் பிறக்கமுடியும்? ஒருவன் மீண்டும் தாயின் சரீரத்திற்குள் நுழையமுடியாது. ஆகையால் ஒருவன் இரண்டாம் முறையாக பிறக்க முடியாதே” என்றான்.

இதற்குப் பதிலாக இயேசு, “நான் உனக்கு ஓர் உண்மையைச் சொல்கிறேன். ஒருவன் நீரில் இருந்தும் ஆவியில் இருந்தும் பிறக்க வேண்டும். ஒருவன் இவற்றிலிருந்து பிறக்காவிடில் அவனால் தேவனின் இராஜ்யத்துக்குள் நுழைய முடியாது. ஒரு மனிதனின் சரீரமானது அவனது பெற்றோர்களிடமிருந்து கிடைக்கின்றது. ஆனால் அம்மனிதனது ஆவிக்குரிய வாழ்வோ ஆவியானவரிடமிருந்து பிறக்கிறது. நான் சொன்னதைப் பற்றி நீ வியப்பு அடையவேண்டாம். ‘நீ மறுபடியும் பிறக்க வேண்டும்.’ காற்று எங்கே செல்ல விரும்புகிறதோ அங்கே வீசும். நீ காற்றின் ஓசையைக் கேட்பாய். ஆனால் அந்தக் காற்று எங்கிருந்து வருகிறது, எங்கே போகிறது என்பதை நீ அறியமாட்டாய். இதுபோலத்தான் ஒவ்வொரு மனிதனும் ஆவியானவரிலிருந்து பிறக்கிறான்” என்றார்.

“இவை எவ்வாறு இயலும்?” என்று நிக்கொதேமு கேட்டான்.

10 “நீ யூதர்களின் முக்கியமான ஒரு போதகன். ஆனால் உன்னால் இவற்றைப்பற்றி இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லையே! 11 நான் உனக்கு உண்மையைக் கூறுகிறேன், நாங்கள் எங்களுக்குத் தெரிந்தவற்றைப்பற்றியே பேசுகிறோம். நாங்கள் பார்த்தவற்றை மட்டுமே சொல்லுகிறோம். ஆனால் உன்னைப்போன்றவர்கள் நாங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்வதில்லை. 12 நான் பூமியில் உள்ளவற்றைப் பற்றி உனக்குச் சொன்னேன். ஆனால் நீ என்னை நம்புகிறதில்லை. ஆகையால், நான் பரலோகத்தில் உள்ளவற்றைப்பற்றி சொன்னாலும் நீ அவற்றையும் நம்பப்போவதில்லை. 13 பரலோகத்திற்கு ஏறிச் சென்ற ஒரே ஒருவரே பரலோகத்தில் இருந்து இறங்கி வந்தவர். அவர்தான் மனிதகுமாரன்.

14 “வனாந்தரத்தில் மோசே பாம்பினை உயர்த்திப் பிடித்தான். அவ்வாறே மனிதகுமாரனும் உயர்த்தப்பட வேண்டும்.[a] 15 பிறகு அந்த மனிதகுமாரன்மேல் நம்பிக்கை வைக்கிற ஒவ்வொருவரும் நித்திய ஜீவனைப் பெறமுடியும்.

16 “ஆம்! தேவன் இவ்வுலகினைப் பெரிதும் நேசித்தார். எனவே தனது ஒரே குமாரனை இதற்குத் தந்தார். தேவன் தன் குமாரனைத் தந்ததால் அவரில் நம்பிக்கை வைக்கிற எவரும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனைப் பெறுவர். 17 தேவன் தன் குமாரனை உலகிற்கு அனுப்பினார். உலகின் குற்றங்களை நியாயம் விசாரிக்க தனது குமாரனை அனுப்பவில்லை. இவ்வுலகம் தேவனுடைய குமாரனால் இரட்சிக்கப்படுவதற்கென்று தேவன் தன் குமாரனை அனுப்பினார். 18 தேவகுமாரன் மீது நம்பிக்கை வைக்கிறவர்கள் தண்டிக்கப்படுவதில்லை. ஆனால், அவர் மீது நம்பிக்கைகொள்ளாதவர்கள் ஏற்கெனவே தண்டிக்கப்பட்டுவிட்டார்கள். ஏன்? ஏனென்றால் அவர்களுக்கு தேவனுடைய ஒரே குமாரன் மீது நம்பிக்கை இல்லை. 19 இந்த உலகத்துக்கு ஒளி (நன்மை) வந்திருக்கிறது. ஆனால் அந்த ஒளியை மக்கள் விரும்பவில்லை. அவர்கள் இருளை (பாவத்தை) விரும்பினார்கள். ஏனென்றால் அவர்கள் தீய செயல்களைச் செய்துகொண்டிருந்தார்கள். இந்த உண்மையை வைத்தே அவர்கள் நியாயம் விசாரிக்கப்படுகிறார்கள். 20 தீமைகளைச் செய்கிற ஒவ்வொரு மனிதனும் ஒளியை வெறுக்கிறான். அவன் வெளிச்சத்துக்குள் வரமாட்டான். ஏனென்றால் ஒளி அவன் செய்த தீமைகளை வெளிப்படுத்திக்காட்டும். 21 ஆனால் உண்மை வழியைப் பின்தொடர்ந்து செல்கிறவர்கள் ஒளியிடம் வந்தடைகிறார்கள். பிறகு, அந்த ஒளி அவர்கள் செய்த செயல்கள் தேவன் மூலமாகச் செய்த நற்செயல்கள் எனக் காட்டும்[b] என்று இயேசு கூறினார்.”

இயேசுவும், யோவான் ஸ்நானகனும்

22 அதற்குப் பிறகு, இயேசுவும் அவரது சீஷர்களும் யூதேயா பகுதிக்குப் போனார்கள். அங்கு இயேசு தன் சீஷர்களோடு தங்கி ஞானஸ்நானம் கொடுத்தார். 23 யோவானும் அயினோனில் ஞானஸ்நானம் கொடுத்து வந்தான். அயினோன், சாலிம் அருகில் உள்ளது. அங்கே தண்ணீர் மிகுதியாக இருந்ததால் யோவான் ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்தான். மக்கள் அவனிடம் போய் ஞானஸ்நானம் பெற்றார்கள். 24 (இது யோவான் சிறையில் அடைக்கப்படும் முன்பு நிகழ்ந்தது).

25 யோவானின் சீஷர்களுள் சிலர், யூதரோடு விவாதித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் மத சம்பந்தமான முறையைப்பற்றியே விவாதித்தனர். 26 ஆகையால் யோவானிடம் அவர்கள் வந்தனர். “போதகரே! யோர்தான் நதிக்கு அக்கரையில் ஒருவர் உம்மோடு இருந்தாரே, நினைவிருக்கிறதா? நீங்கள் அந்த மனிதரைப்பற்றியும் மக்களிடம் சொல்லியிருக்கிறீர்கள். அவர் மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருக்கிறார். அவரிடம் ஏராளமான மக்கள் சென்றுகொண்டிருக்கின்றனர்” என்று கூறினர்.

27 “தேவன் எதை ஒருவனுக்குக் கொடுக்கிறாரோ, அதையே ஒரு மனிதன் பெற்றுக்கொள்ள முடியும். 28 ‘நான் கிறிஸ்து அல்ல’ என்று நானே கூறியதையும் நீங்கள் சோதித்து அறிந்திருக்கிறீர்கள். ‘அவருக்கான பாதையைச் செம்மை செய்வதற்காகவே தேவன் என்னை அனுப்பியிருக்கிறார்.’ 29 மணமகனுக்கே மணமகள் உரியவளாகிறாள். மணமகனுக்கு உதவி செய்கிற மாப்பிள்ளையின் தோழன், மணமகனின் வரவைக் கவனித்து எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறான். மணமகனின் சத்தத்தைக் கேட்டு அவன் மிகவும் மகிழ்கிறான். நானும் அதே மகிழ்ச்சியை அடைகிறேன். இதுவே எனது மகிழ்ச்சிகரமான நேரம். 30 இயேசு மேலும் பெருமை பெறவேண்டும். எனது முக்கியத்துவம் குறைந்துவிடவேண்டும்.

பரலோகத்திலிருந்து வந்தவர்

31 “பரலோகத்திலிருந்து வந்திருக்கிற இயேசு மற்ற எல்லாரையும்விடப் பெரியவர். பூமியில் இருந்து வந்தவன் பூமியைச் சார்ந்தவன். அவன் பூமியில் உள்ளவற்றைப்பற்றி மட்டுமே பேசுவான். ஆனால் பரலோகத்திலிருந்து வந்திருக்கிற இயேசுவோ மற்ற எல்லாரையும்விட உயர்ந்தவர். 32 அவர் எதைக் கண்டாரோ, கேட்டாரோ அதையே கூறுகிறார். ஆனால் எவரும் அவர் சொல்வதை ஏற்றுக்கொள்வதில்லை. 33 அவர் சொல்வதை எவனொருவன் ஒப்புக்கொள்கிறானோ அவன், தேவன் உண்மையாய் இருக்கிறார் என்று நிரூபிக்கிறான். 34 தேவன் இயேசுவை அனுப்பினார். அவர் தேவன் சொன்னதைச் சொல்கிறார். தேவன் அவருக்கு ஆவியை நிரம்பக் கொடுத்திருக்கிறார். 35 பிதாவானவர் தன் குமாரனை நேசிக்கிறார். அவர் தன் குமாரனுக்கு அனைத்தின் மேலும் அதிகாரம் கொடுத்திருக்கிறார். 36 இந்தக் குமாரனை நம்புகிற எவரும் நித்திய ஜீவனைப் பெறுவர். ஆனால் அவருக்குக் கீழ்ப்படிய மறுக்கிற எவரும் அந்த வாழ்வை ஒருபோதும் பெற முடியாது. தேவனுடைய கோபம் அவர்கள் மேல் இருக்கும்” என்று யோவான் அவர்களுக்குக் கூறினான்.

Footnotes

  1. யோவான் 3:14 வனாந்தரத்தில் … வேண்டும் தேவனின் மக்கள் பாம்புக்கடியால் செத்துக்கொண்டிருந்தபோது தேவன் மோசேயிடம் வெண்கலத்தால் ஒரு பாம்பு செய்து கம்பத்தின்மேல் வைத்து அதனைப் பார்த்து குணமடையச் சொன்னார்.
  2. யோவான் 3:21 சில அறிஞர்கள் 16 முதல் 21 வரையிலான வாக்கியங்கள் இயேசுவின் வார்த்தைகள் என்று எண்ணினர். மற்றவர்கள் யோவானால் எழுதப்பட்டது எனக் கருதினர்.