Add parallel Print Page Options

五旬节圣灵降临

五旬节到了,他们都聚集在一起。 忽然有一阵好象强风吹过的响声,从天而来,充满了他们坐在里面的整间屋子。 又有火焰般的舌头显现出来,分别落在他们各人身上。 他们都被圣灵充满,就照着圣灵所赐给他们的口才,用别种语言说出话来。

那时住在耶路撒冷的,有从天下各国来的虔诚的犹太人。 这声音一响,许多人都聚了来,人人都听见门徒讲出听众各人本乡的话,就莫名其妙。 他们又惊讶、又惊奇,说:“你看,这些说话的,不都是加利利人吗? 我们各人怎么听见他们讲我们从小所用的本乡话呢? 我们帕提亚人、玛代人、以拦人和住在美索不达米亚、犹太、加帕多家、本都、亚西亚、 10 弗吕家、旁非利亚、埃及,并靠近古利奈的利比亚一带地方的人,客居罗马的犹太人和归信犹太教的人, 11 克里特人以及阿拉伯人,都听见他们用我们的语言,讲说 神的大作为。” 12 众人还在惊讶迷惘的时候,彼此说:“这是甚么意思?” 13 另有些人讥笑说:“他们是给新酒灌醉了。”

彼得在五旬节的讲道

14 彼得和十一使徒站起来,他高声对众人说:“犹太人和所有住在耶路撒冷的人哪,你们应当明白这件事,也应该留心听我的话。 15 这些人并不是照你们所想的喝醉了,现在不过是上午九点钟罢了。 16 这正是约珥先知所说的:

17 ‘ 神说:在末后的日子,

我要把我的灵浇灌所有的人,

你们的儿女要说预言,

你们的青年人要见异象,

你们的老年人要作异梦。

18 在那些日子,

我也要把我的灵浇灌我的仆人和使女,他们就要说预言。

19 我要在天上显出奇事,

在地上显出神迹,

有血、有火、有烟雾;

20 太阳将变为黑暗,

月亮将变为血红,

在主伟大显赫的日子临到以前,这一切都要发生。

21 那时,凡求告主名的,都必得救。’

22 “以色列人哪,请听听这几句话:正如你们所知道的, 神已经借着拿撒勒人耶稣在你们中间施行了大能、奇事、神迹,向你们证明他是 神所立的。 23 他照着 神的定旨和预知被交了出去,你们就藉不法之徒的手,把他钉死了。 24  神却把死的痛苦解除,使他复活了,因为他不能被死亡拘禁。 25 大卫指着他说:

‘我时常看见主在我面前,

因他在我右边,我必不会动摇。

26 为此我的心快乐,我的口舌欢呼,

我的肉身也要安居在盼望中。

27 因你必不把我的灵魂撇在阴间,

也必不容你的圣者见朽坏。

28 你已经把生命之路指示了我,

必使我在你面前有满足的喜乐。’

29 “弟兄们,关于祖先大卫的事,我不妨坦白告诉你们,他死了,葬了,直到今日他的坟墓还在我们这里。 30 他是先知,既然知道 神向他起过誓,要从他的后裔中立一位,坐在他的宝座上, 31 又预先看见了这事,就讲论基督的复活说:

‘他不会被撇在阴间,

他的肉身也不见朽坏。’

32 这位耶稣, 神已经使他复活了,我们都是这事的见证人。 33 他既然被高举到 神的右边,从父领受了所应许的圣灵,就把他浇灌下来,这就是你们所看见所听见的。 34 大卫并没有升到天上,他却说:

‘主对我主说:

你坐在我的右边,

35 等我使你的仇敌作你的脚凳。’

36 因此,以色列全家应当确实知道,你们钉在十字架上的这位耶稣, 神已经立他为主为基督了。”

37 他们听了以后,觉得扎心,就对彼得和其余的使徒说:“弟兄们,我们应当作甚么呢?” 38 彼得说:“你们应当悔改,并且每一个人都要奉耶稣基督的名受洗,使你们的罪得赦,就必领受圣灵,那白白的恩典。 39 这应许原是给你们和你们的儿女,以及所有在远方的人,就是给凡是我们主 神召来归他的人。” 40 彼得还用许多别的话,郑重作证,并且劝勉他们,说:“你们应当救自己脱离这弯曲的世代!” 41 于是接受他话的人都受了洗,那一天门徒增加了约三千人。 42 他们恒心遵守使徒的教训,彼此相通、擘饼和祈祷。

信徒的团契生活

43 使徒行了许多奇事神迹,众人就都惧怕。 44 所有信的人都在一起,凡物公用, 45 并且变卖产业和财物,按照各人的需要分给他们。 46 他们天天同心在殿里恒切地聚集,一家一家地擘饼,存着欢乐和诚恳的心用饭, 47 又赞美 神,并且得到全民的喜爱。主将得救的人,天天加给教会。

圣灵的来临

五旬节 [a]到了,他们都聚在一个地方。 突然,从天上传来一个声音,好似狂风大作一般,充满了他们所在的屋子。 一团火舌般的烈焰出现在他们面前,然后分别落在了每个人的身上。所有的人于是都充满了圣灵, 并且按照圣灵赐予的能力,开始讲不同的语言。

那时候,来自世界各国的虔诚的犹太人住在耶路撒冷。 他们听到响声后,都来聚在一起。他们都很纳闷,因为当他们讲话时,每人都听到了自己的乡音。 他们无法理解怎么可能发生这种事情,都很吃惊,惊讶之余,他们说∶“说话的这些人难道不都是加利利人吗? 那么为什么每个人听到的都是他自己的语言呢? 其中有帕提亚人、玛代人、以拦人;还有从米所波大米、犹太、加帕多家、本都、亚西亚、 10 弗吕家、旁非利亚、埃及和古利奈附近的吕彼亚一带来的人;还有从罗马来的访问者, 11 有犹太人和皈依犹太教的人;还有克里特人以及阿拉伯人。我们听见那些人在用我们自己的母语讲述着上帝的伟迹!” 12 人们都感到十分惊奇和不解,彼此说道∶“这意味着什么呢?” 13 也有人取笑他们说∶“他们不过是喝多了!”

彼得对众人讲话

14 这时,彼得和另外十一个使徒站起身来。彼得提高了嗓门,对众人说∶“犹太同胞和所有住在耶路撒冷的人们,让我来告诉你们这是什么意思吧。请仔细听我说。 15 这些人并不像你们以为的那样是喝醉了,因为现在只是早晨九点钟, 16 但是,这情形正是先知约珥所说过的:

17 上帝说,
在最后的日子里,
我要把我的圣灵倾注给所有的人,
你们的儿女将会预言未来,
你们的年轻男子要看到异象,
你们的老年人要做出奇异的梦。
18 是的,在那些日子里,
我会把我的圣灵倾洒给我的奴仆,无论男女,
因此,他们都会预言。
19 我要在天上展示奇迹,
在地下显示迹象:有血、火以及烟雾,
20 在主的伟大、荣耀的那一天到来之前,
太阳要变得一团漆黑,
月亮会变成一片血红。
21 而所有信任主的人,都将得到拯救。 (A)

22 我的同胞以色列人,听着:拿撒勒的耶稣是一个非常特殊的人,上帝通过他在你们中间所行的奇迹、异象和神迹证实了这一点,你们都已看到了这些事情,你们自己知道这都是真实的。 23 上帝把这个人交给了你们,而你们却在恶人的帮助下,把他钉死在十字架上了。上帝知道这将会发生。这是按照他已决定的计划发生的。 24 然而,上帝却让他起死回生,把他从死亡的痛苦中解脱出来,因为他不可能受到死的束缚。 25 大卫是这样形容他的:

我总是看见主在我的面前,
他站在我的右侧,因而我不会受到困扰,
26 正因为如此,我的心充满了欢喜,
我的嘴伴着快乐说话;
我的身体也生在希望之中。
27 因为你不会把我丢弃在坟墓里,
你不会让你的圣者经历腐朽。
28 你已经告知我通向生活的道路;
与你同在,欢乐会充满我。 (B)

29 我的兄弟们,我可以确切地告诉大家,先祖大卫死了,被埋葬了。他的坟墓保留至今。 30 但是,他是一位先知,他知道上帝曾用誓言向他许诺,要把他的一个后代置于他的宝座上, 31 他看到了未来的事情,所以谈到基督复活时,他说:

‘他没有被丢弃在坟墓里,
他的身体也不会经历腐朽。’

32 上帝使这个耶稣从死里复活,我们都是这一事实的见证人。 33 耶稣被升至上帝的右侧,领受了天父许下的圣灵,并把它抛洒出去,即你们现在的所见所闻的。 34 大卫并没有到天上去,然而他却说:

‘主对我主说:
坐在我的右侧,
35 直到我把你的敌人置于你的脚下,
变成你的垫脚凳。’ (C)

36 因此,让所有的以色列人都肯定地知道,上帝让你们钉死在十字架上的这个耶稣成为主和基督了。”

37 众人听到这里,仿佛感到一把刀刺进了他们的心脏。他们对彼得和其他的使徒说∶“弟兄们,我们该怎么办呢?”

38 彼得对他们说∶“改变你们的内心与生活吧,你们中间的每一个人都应该奉耶稣基督的名义接受洗礼,使你们的罪得到宽恕。那么你们就会领受到圣灵的馈赠, 39 因为他的诺言是为了你们、你们的后代以及所有远方的人们-即所有那些受到主我们的上帝的召唤,来到他身边的人们。”

40 彼得又讲了很多话来警诫众人,然后又请求他们说∶“把你们自己从这邪恶的一代人里救出来吧!” 41 那些接受了他的信息的人们,都受了洗礼。那一天,大约有三千人增加到信徒的行列。 42 他们把时间都花在倾听他们的教导、同分享、同吃 [b]和祷告上。

信徒同分享

43 使徒们又行了很多奇事神迹,每个人的心里都生出敬畏之情。 44 信徒们呆在一起,分享他们的所有。 45 他们卖掉财物和家产,把它们分给所需要的人。 46 每天,他们都在大殿院里聚会,在家里同吃,并带着快乐与真挚的心享用, 47 他们赞美上帝,深得所有人的好感。每天主都增加人到得救的人的行列里去。

Footnotes

  1. 使 徒 行 傳 2:1 五旬节: 犹太人庆祝麦收的节日。它在逾越节后的50天。
  2. 使 徒 行 傳 2:42 同吃: 直译为分吃饼,其意为吃一顿饭或吃主的晚餐,即耶稣告诉他的信徒们为了记念他所吃的那顿特殊的晚餐。《路加福音》22:14-20。

பரிசுத்த ஆவியானவரின் வருகை

பெந்தெகோஸ்தே நாளில் அப்போஸ்தலர் அனைவரும் ஓரிடத்தில் கூடியிருந்தனர். திடீரென வானிலிருந்து ஓசை ஒன்று எழுந்தது. பெருங்காற்று அடித்தாற்போல அது ஒலித்தது. அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதையும் அவ்வொலி நிரப்பிற்று. நெருப்புக் கொழுந்து போன்றவற்றை அவர்கள் கண்டனர். அக்கொழுந்துகள் பிரிந்து சென்று அங்கிருந்த ஒவ்வொருவர் மேலும் நின்றன. அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார்கள். பல்வேறு மொழிகளில் அவர்கள் பேச ஆரம்பித்தார்கள். இப்படிப்பட்ட வல்லமையை பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தார்.

அக்காலத்தில் எருசலேமில் மிக பக்திமான்களாகிய யூதர்கள் சிலர் தங்கியிருந்தனர். உலகத்தின் எல்லா தேசத்தையும் சார்ந்தவர்களாக இந்த மனிதர்கள் இருந்தனர். ஒலியைக் கேட்டு இம்மனிதர்கள் பெருங்கூட்டமாக அங்கு வந்தனர். அப்போஸ்தலர்கள் பேசிக்கொண்டிருக்கையில் ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த மொழியில் கேட்டதால் அம்மனிதர்கள் வியப்புற்றனர்.

யூதர்கள் இதனால் ஆச்சரியமடைந்தனர். அப்போஸ்தலர்கள் எவ்வாறு இதைச் செய்ய முடிந்தது என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள், “பாருங்கள்! பேசிக்கொண்டிருக்கும் இந்த மனிதர்கள் எல்லோரும் கலிலேயாவைச் சேர்ந்தவர்கள்! ஆனால் நமது மொழிகளில் அவர்கள் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்கிறோம். எப்படி இது இயலும்? நாம் பார்த்தியா, மேதியா, ஏலாம், மெசொபொதாமியா, யூதேயா, கப்பதோகியா, பொந்து, ஆசியா, 10 பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேனே நகரங்களிற்கு அருகேயுள்ள லிபியா நாட்டுப் பகுதிகள், 11 கிரேத்தா, ரோமிலிருந்து வந்த மக்கள் மற்றும் அரேபியா ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள். நம்மில் சிலர் யூதர்களாகப் பிறந்தவர்கள் மற்றவர்கள் யூதர்களாக மதம் மாறியவர்கள். நாம் வெவ்வேறு நாட்டினர். ஆனால் இவர்கள் நம் மொழிகளில் பேசுவதைக் கேட்கிறோமே! அவர்கள் தேவனைக் குறித்துக் கூறும் மேன்மையான காரியங்களை நம்மெல்லோராலும் புரிந்துகொள்ள முடிகிறதே” என்றார்கள்.

12 மக்கள் அனைவரும் வியப்புற்றவர்களாகவும் குழப்பமடைந்தவர்களாகவும் காணப்பட்டனர். அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, “என்ன நடந்துகொண்டிருக்கிறது?” என்று வினவினர். 13 பிற மக்கள் அப்போஸ்தலர்களைப் பார்த்துச் சிரித்தனர். அம்மக்கள் அப்போஸ்தலர் மிகுதியான மதுவைப் பருகியிருந்தனர் என நினைத்தனர்.

பேதுரு மக்களிடம் பேசுதல்

14 அப்பொழுது பேதுரு மற்ற அப்போஸ்தலர் பதினொருவரோடும் எழுந்து நின்றான். எல்லா மக்களும் கேட்கும்படியாக உரக்கப் பேசினான். அவன், “எனது யூத சகோதரர்களே, எருசலேமில் வசிக்கும் மக்களே, நான் கூறுவதைக் கவனியுங்கள். நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில கருத்துக்களை உங்களுக்குக் கூறுவேன். கவனமாகக் கேளுங்கள். 15 நீங்கள் நினைக்கிறது போல் இம்மனிதர்கள் மது பருகியிருக்கவில்லை. இப்போது காலை ஒன்பது மணிதான். 16 இங்கு இன்றைக்கு நிகழ்ந்துகொண்டிருப்பதைக் குறித்து யோவேல் என்னும் தீர்க்கதரிசி எழுதியிருக்கிறார். யோவேல் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்:

17 “‘தேவன் கூறுகிறார், கடைசி நாட்களில் நான் எனது ஆவியை எல்லா மக்களுக்கும் அள்ளி வழங்குவேன்.
    ஆண் மக்களும், பெண்மக்களும் தீர்க்கதரிசனம் உரைப்பர்.
உங்கள் இளைஞர் தரிசனம் காண்பார்கள்.
    உங்கள் முதியோர் விசேஷக் கனவுகள் காண்பர்.
18 அந்நேரத்தில் எனது ஆவியை எனது ஊழியர்களாகிய ஆண்களுக்கும் பெண்களுக்கும் கொடுப்பேன்.
    அவர்கள் தீர்க்கதரிசனம் உரைப்பர்.
19 மேலே வானில் வியப்புறும் காட்சிகளைக் காண்பிப்பேன்.
    கீழே பூமியிலும் சான்றுகள் தருவேன்.
    அங்கு இரத்தம், நெருப்பும், புகை மண்டலமும் இருக்கும்.
20 சூரியன் இருளாக மாறும்.
    நிலா இரத்தம் போல் சிவப்பாகும்.
அப்போது கர்த்தருடைய மகத்தான மகிமை மிக்க நாள் வரும்.
21 கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும் ஒவ்வொரு மனிதனும் இரட்சிக்கப்படுவான்.’(A)

22 “எனது யூத சகோதரர்களே, இந்த வார்த்தைகளைக் கவனியுங்கள். நாசரேத்தின் இயேசு மிகச் சிறப்பான மனிதர். தேவன் இதைத் தெளிவாக உங்களுக்குக் காட்டினார். இயேசுவின் மூலமாக அவர் செய்த வல்லமை மிக்க வியப்பான காரியங்களால் தேவன் இதை நிரூபித்தார். நீங்கள் எல்லோரும் இந்தக் காரியங்களைப் பார்த்தீர்கள். எனவே இது உண்மையென்பது உங்களுக்குத் தெரியும். 23 இயேசு உங்களுக்குக் கொடுக்கப்பட்டார். நீங்கள் அவரைக் கொன்றீர்கள். தீயவர்களின் உதவியோடு இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால் இவையெல்லாம் நடக்குமென்பதை தேவன் அறிந்திருந்தார். இது தேவனுடைய திட்டமாக இருந்தது. வெகுகாலத்திற்கு முன்னரே தேவன் இந்தத் திட்டத்தை வகுத்திருந்தார். 24 மரணத்தின் வேதனையை இயேசு அனுபவித்தார். ஆனால் தேவன் அவரை விடுவித்தார். தேவன் இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பினார். மரணம் இயேசுவைத் தொடர்ந்து தன் பிடிக்குள் வைத்திருக்க முடியவில்லை. 25 தாவீது இயேசுவைக் குறித்து இவ்வாறு கூறினான்:

“‘நான் ஆண்டவரை எப்போதும் என்முன் காண்கிறேன்.
    என்னைப் பாதுகாப்பதற்கு எனது வலப்புறத்தே உள்ளார்.
26 எனவே என் உள்ளம் மகிழுகிறது,
    என் வாய் களிப்போடு பேசுகிறது.
ஆம், எனது சரீரமும் கூட நம்பிக்கையால் வாழும்.
27     ஏனெனில் மரணத்தின் இடத்தில்[a] எனது ஆத்துமாவை நீர் விட்டு விடுவதில்லை.
    உமது பரிசுத்தமானவரின் சரீரத்தைக் கல்லறைக்குள் அழுகிவிட நீர் அனுமதிப்பதில்லை.
28 வாழும் வகையை எனக்குப் போதித்தீர்.
    என்னருகே நீர் வந்து அளவற்ற ஆனந்தம் தருவீர்.’(B)

29 “எனது சகோதரர்களே, நமது முன்னோராகிய தாவீதைக் குறித்து உண்மையாகவே உங்களுக்கு என்னால் சொல்லமுடியும். அவன் இறந்து புதைக்கப்பட்டான். அவன் புதைக்கப்பட்ட இடம் இங்கேயே நம்மிடையே இன்றும் உள்ளது. 30 தாவீது ஒரு தீர்க்கதரிசி. தேவன் கூறிய சில செய்திகளை அவன் அறிந்திருந்தான். தாவீதின் குடும்பத்திலுள்ள ஒருவரை தாவீதைப்போன்று மன்னனாக்குவேன் என்று தேவன் தாவீதுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். 31 அது நடக்கும் முன்பே தாவீது அதனை அறிந்திருந்தான். எனவேதான் அவரைக் குறித்து தாவீது இவ்வாறு கூறினான்.

“‘அவர் மரணத்தின் இடத்தில் விடப்படவில்லை.
அவர் சரீரம் கல்லறையில் அழுகவில்லை.’

தாவீது மரணத்தின்று எழும்பும் கிறிஸ்துவைக் குறித்துப் பேசினான். 32 எனவே தாவீதை அல்ல, இயேசுவையே தேவன் மரணத்தினின்று எழுப்பினார். நாங்கள் எல்லோரும் இதற்கு சாட்சிகள். நாங்கள் அவரைக் கண்டோம். 33 இயேசு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். இப்போது இயேசு தேவனோடு, தேவனுடைய வலது பக்கத்தில் இருக்கிறார். பிதா பரிசுத்தாவியை இயேசுவுக்குக் கொடுத்துள்ளார். பிதா கொடுப்பதாக வாக்குறுதி அளித்தது பரிசுத்த ஆவியேயாகும். எனவே இயேசு அந்த ஆவியை இப்பொழுதுகொடுத்துக்கொண்டிருக்கிறார். இதையே நீங்கள் பார்க்கவும், கேட்கவும் செய்கிறீர்கள். 34-35 தாவீது பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டவரல்ல. பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டவர் இயேசுவே. தாவீது கூறினான்,

“‘தேவன் என் கர்த்தரிடம் சொன்னார்,
உம் எதிரிகள் அனைவரையும் உம்
    அதிகாரத்தின் கீழ் கொண்டு வரும்வரை என் வலதுபுறத்தில் உட்கார்ந்துகொள்ளும்.’(C)

36 “எனவே எல்லா யூத மனிதர்களும் இதை உண்மையாகத் தெரிந்திருக்க வேண்டும். ஆண்டவராகவும் கிறிஸ்துவாகவும் இருக்கும்படியாக இயேசுவை தேவன் உண்டாக்கினார். அவரே நீங்கள் சிலுவையில் அறைந்த மனிதர்” என்றான்.

37 மக்கள் இதைக் கேட்டபோது அவர்கள் தங்கள் இதயத்தில் மிகவும் வருத்தம் அடைந்தார்கள். அவர்கள் பேதுருவையும் பிற அப்போஸ்தலரையும் நோக்கி, “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள்.

38 பேதுரு அவர்களை நோக்கி, “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இருதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றி, இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள். அப்போது தேவன் உங்கள் பாவங்களை மன்னிப்பார். நீங்களும் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். 39 இந்த வாக்குறுதி உங்களுக்குரியது. அது உங்கள் பிள்ளைகளுக்கும் தொலைவில் வாழ்கின்ற எல்லா மக்களுக்கும் கூட உரியது. ஆண்டவராகிய நமது தேவன் தன்னிடம் அழைக்கிற ஒவ்வொரு மனிதனுக்கும் அது உரியது” என்று கூறினான்.

40 வேறு பல வார்த்தைகளையும் கூறி பேதுரு அவர்களை எச்சரித்தான். அவன் அவர்களை, “இன்று வாழ்கின்ற மக்களின் தீமைகளிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்” என்று வேண்டினான். 41 பேதுரு கூறியவற்றை ஏற்றுக்கொண்ட அந்த மக்கள் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டனர். அந்த நாளில் விசுவாசிகளின் கூட்டத்தில் சுமார் 3,000 மக்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

விசுவாசிகளின் ஒருமனம்

42 விசுவாசிகள் தொடர்ந்து ஒன்றாக சந்தித்தனர். அப்போஸ்தலரின் போதனையைக் கற்பதற்குத் தங்கள் நேரத்தைச் செலவிட்டனர். விசுவாசிகள் ஒருவரோடொருவர் பகிர்ந்துகொண்டனர். அவர்கள் ஒருமித்து உண்டு, ஒருமித்து பிரார்த்தனை செய்தார்கள். 43 பல வல்லமை மிக்க, வியப்பான காரியங்களை அப்போஸ்தலர்கள் செய்துகொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் தேவனை மிகவும் மரியாதையாக உணர்ந்தனர். 44 எல்லா விசுவாசிகளும் ஒருமித்து வசித்தனர். அவர்கள் எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டனர். 45 விசுவாசிகள் அவர்களது நிலங்களையும் அவர்களுக்குச் சொந்தமான பொருட்களையும் விற்றனர். பின்னர் பணத்தைப் பங்கிட்டு, தேவைப்பட்ட ஒவ்வொருவருக்கும் அவர்களது தேவைக்கேற்பக் கொடுத்தனர். 46 ஒவ்வொரு நாளும் விசுவாசிகள் தேவாலயத்தில் சந்தித்தனர். அவர்களது குறிக்கோள் ஒன்றாகவே இருந்தது. அவர்களுடைய வீடுகளில் ஒருமித்து உண்டனர். அவர்கள் உணவைப் பங்கிட்டுக்கொள்வதிலும் களிப்புமிக்க உள்ளங்களோடு உண்பதிலும் மகிழ்ச்சியடைந்தனர். 47 விசுவாசிகள் தேவனை வாழ்த்தினர். எல்லா மக்களும் அவர்களை விரும்பினர். ஒவ்வொரு நாளும் அதிகமதிகமான மக்கள் இரட்சிக்கப்பட்டனர். விசுவாசிகளின் கூட்டத்தில் கர்த்தர் அம்மக்களைச் சேர்த்துக்கொண்டிருந்தார்.

Footnotes

  1. அப்போஸ்தலர் 2:27 மரணத்தின் இடத்தில் எழுத்தின்படியான பொருள் “பாதாளம்.”