Add parallel Print Page Options

அப்போஸ்தலர்களை அனுப்புதல்

(மாற்கு 3:13-19; 6:7-13; லூக்கா 6:12-16; 9:1-6)

10 இயேசு தமது பன்னிரண்டு சீஷர்களையும் ஒன்றாய் அழைத்தார். தீய ஆவிகளை மேற்கொள்ளும் வல்லமையை இயேசு அவர்களுக்கு வழங்கினார். எல்லா விதமான நோய்களையும் பிணிகளையும் குணப்படுத்தும் வல்லமையையும் இயேசு அவர்களுக்கு வழங்கினார். அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் பெயர்கள் வருமாறு:

சீமோன் (மற்றொரு பெயர் பேதுரு.)

மற்றும் அவரது சகோதரன் அந்திரேயா,

செபதேயுவின் குமாரன் யாக்கோபு மற்றும்

அவரது சகோதரன் யோவான்,

பிலிப்பு

மற்றும் பார்த்தலோமியு,

தோமா

மற்றும் வரி வசூலிக்கும் அதிகாரியான மத்தேயு,

அல்பேயுவின் குமாரன் யாக்கோபு,

ததேயு,

சீலோத்தியனாகிய சீமோன் மற்றும் யூதா ஸ்காரியோத்து.

இயேசுவை அவரது எதிரிகளிடம் காட்டிக்கொடுத்தவன் இந்த யூதாஸ் ஆவான்.

Read full chapter

அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுத்தல்

(மத்தேயு 10:1-4; மாற்கு 3:13-19)

12 அக்காலத்தில் இயேசு பிரார்த்தனை செய்யும்பொருட்டு ஒரு மலைக்குச் சென்றார். இரவு முழுவதும் தேவனிடம் பிரார்த்தனை செய்தவாறே அம்மலையில் இருந்தார். 13 மறு நாள் காலையில் இயேசு தனது சீஷர்களை அழைத்தார். அவர்களுள் பன்னிரண்டு பேரைத் தேர்ந்தெடுத்தார். அவர்களுக்கு “அப்போஸ்தலர்கள்” என்று பெயரிட்டார். அவர்கள்:

14 சீமோன் (இயேசு அவனுக்கு பேதுரு என்று பெயரிட்டார்)

அந்திரேயா என்னும் பேதுருவின் சகோதரன்,

யாக்கோபு,

யோவான்,

பிலிப்பு,

பர்தொலொமேயு,

15 மத்தேயு,

தோமா,

யாக்கோபு (அல்பேயுவின் குமாரன்),

சீமோன் (செலோத்தே என்று அழைக்கப்பட்டவன்)

16 யூதா, (யாக்கோபின் குமாரன்) யூதாஸ்காரியோத் என்பவர்கள் ஆவார்கள்.

இந்த யூதாஸ் இயேசுவைப் பகைவர்களிடம் ஒப்படைத்தவனாவான்.

Read full chapter