Add parallel Print Page Options

தேவனுடையச் சொந்த வல்லமை அவரது ஜனங்களைக் காப்பாற்றும்

கர்த்தருடைய கையே!
    (வல்லமை) எழும்பு, எழும்பு, பலமாகு!
உனது பலத்தைப் பயன்படுத்து, நீண்ட காலத்துக்கு முன்பு நீ செய்தது போன்றும் பழங்காலத்தில் நீ செய்ததுபோன்றும் நீரே ராகாப்பைத் தோற்கடிக்க வல்லமையாக இருந்தீர்.
    நீர் அந்த பயங்கர பிராணியைத் தோற்கடித்தீர்.
10 கடலின் தண்ணீர் வறண்டுபோவதற்குக் காரணமாக இருந்தீர்! நீர் பெரும் ஆழங்களில் உள்ள தண்ணீரை வற்றச்செய்தீர்!
    கடலின் ஆழமான இடங்களில் சாலைகளை அமைத்தீர்.
    சாலையைக் கடந்த உமது ஜனங்கள் காப்பாற்றப்பட்டனர்.
11 கர்த்தர் அவரது ஜனங்களைக் காப்பாற்றுவார்.
    அவர்கள் சீயோனுக்கு மகிழ்ச்சியோடு திரும்புவார்கள்.
அவர்கள மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
    அவர்களது மகிழ்ச்சியானது அவர்களின் தலையில் என்றென்றும் இருக்கிற கிரீடம்போல் இருக்கும்.
அவர்கள் மகிழ்ச்சியோடு பாடுவார்கள்.
    அனைத்து துக்கங்களும் வெளியே போகும்.
12 கர்த்தர் கூறுகிறார், “உனக்கு ஆறுதல் தருகிற ஒருவர் நான் மட்டுமே.
    எனவே, நீங்கள் ஜனங்களுக்கு ஏன் பயப்படவேண்டும்.
அவர்கள் வாழவும் மரிக்கவும் கூடிய ஜனங்கள் தான்.
    அவர்கள் மானிடர்கள் மட்டுமே. புழுக்களைப்போலவே மரிக்கிறார்கள்”.

13 கர்த்தர் உன்னைப் படைத்தார்!
    அவர் தமது வல்லமையால் பூமியைப் படைத்தார்!
    அவர் தமது வல்லமையால் பூமிக்கும் மேல் வானத்தை விரித்து வைத்தார்.
ஆனால், நீ அவரையும் அவரது வல்லமையையும் மறந்துவிட்டாய்.
    எனவே, நீ எப்பொழுதும் கோபங்கொண்ட உன்னைப் பாதிக்கும் ஜனங்களுக்குப் பயப்படுகிறாய்.
அவர்கள் உன்னை அழிக்கத் திட்டமிடுகிறார்கள்.
    ஆனால் இப்போது அவர்கள் எங்கே உள்ளனர்? அவர்கள் எல்லாம் போய்விட்டார்கள்.

14 சிறையிலுள்ள ஜனங்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்.
    அந்த ஜனங்கள் சிறைக்குள் மரித்து அழுகமாட்டார்கள்.
    அந்த ஜனங்கள் போதிய உணவைப் பெறுவார்கள்.

15 “நானே உனது தேவனாகிய கர்த்தர்.
    நான் கடலைக் கலக்கி அலைகளைச் செய்தேன்” (சர்வ வல்லமையுள்ள கர்த்தர் என்பது அவரது நாமம்).

16 “எனது தாசனே! நீ சொல்லுவதற்குரிய வார்த்தைகளை நான் உனக்குத் தருவேன். நான் எனது கைகளால் உன்னை மூடி பாதுகாப்பேன். நான் புதிய வானத்தையும், புதிய பூமியையும் படைக்க உன்னைப் பயன்படுத்துவேன். நான் உன்னைப் பயன்படுத்தி இஸ்ரவேலரிடம், ‘நீங்கள் எனது ஜனங்கள்’ என்று சொல்லுவேன்”.

Read full chapter