ஏசாயா 28:1-3
Tamil Bible: Easy-to-Read Version
வட இஸ்ரவேலுக்கு எச்சரிக்கைகள்.
28 சமாரியாவைப் பாருங்கள்!
எப்பிராயீமின் குடிகார ஜனங்கள் அந்நகரைப்பற்றித் தற்பெருமை கொள்கிறார்கள்.
மலைக்கு மேலே வளமான பள்ளாத்தாக்கு சூழ இருக்கிறது.
சமாரியா ஜனங்கள் தம் நகரத்தை அழகான பூக்களாலான கிரீடம் என்று நினைத்திருக்கின்றனர்.
ஆனால், அவர்கள் திராட்சைரசத்தைக் குடித்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்த “அழகான கிரீடமானது” வாடிப்போகும் செடிபோல் உள்ளது.
2 பார், எனது ஆண்டவர் பலமும் தைரியமும் கொண்டவராக இருக்கிறார்.
அவர் பெருங்காற்றும் கல்மழையும் கொண்ட நாட்டுக்குள் வருவார்.
அவர் ஒரு புயலைப்போன்று நாட்டுக்குள் வருவார்.
அவர் ஒரு சக்திவாய்ந்த ஆறு நாட்டுக்குள் பெருக்கெடுத்து வருவதுபோன்று இருப்பார்.
அவர் அந்தக் கிரீடத்தை (சமாரியா) தரையில் தள்ளுவார்.
3 எப்பிராயீமிலுள்ள குடிகார ஜனங்கள் தமது “அழகான மகுடத்தைப்” பற்றி பெருமை கொள்கிறார்கள்.
ஆனால், அந்த நகரம் மிதியுண்டு போகும்.
2008 by Bible League International