Add parallel Print Page Options

தேவனைப்போற்றும் பாடல்

26 அந்த நேரத்தில் யூதாவில் இந்தப் பாடலை ஜனங்கள் பாடுவார்கள்:

கர்த்தரே நமக்கு இரட்சிப்பைத் தருகிறார்.
    நமக்குப் பலமான நகரம் உள்ளது.
    நமது நகரத்திற்குப் பலமான சுவர்களும், தற்காப்புகளும் உள்ளன.
கதவுகளைத் திறவுங்கள். நல்ல ஜனங்கள் நுழைவார்கள்.
    தேவனுடைய நல்ல போதனைகளுக்கு அந்த ஜனங்கள் கீழ்ப்படிவார்கள்.

கர்த்தாவே, உம்மை அண்டியுள்ள ஜனங்களுக்கும்,
    உம்மை நம்புகிற ஜனங்களுக்கும், நீர் உண்மையான சமாதானத்தைக் கொடுக்கிறீர்.

எனவே, எப்பொழுதும் கர்த்தரை நம்புங்கள்.
    ஏனென்றால், கர்த்தராகிய யேகோவாவில் உங்களுக்கு என்றென்றைக்கும் பாதுகாப்பான இடமுண்டு.
ஆனால், கர்த்தர் தற்பெருமை கொண்ட நகரத்தை அழிப்பார்.
    அங்கே வாழுகின்ற ஜனங்களை அவர் தண்டிப்பார்.
கர்த்தர் அந்த உயர்வான நகரத்தை தரையில் போடுவார்.
    அது புழுதிக்குள் விழும்.
பிறகு, ஏழ்மையும் பணிவும் உள்ள ஜனங்களின் கால்கள் அதனை மிதித்துச் செல்லும்.

நல்ல ஜனங்களுக்கு நேர்மையே சிறந்த பாதை.
    நல்ல ஜனங்கள் நேர்மையாகவும், உண்மையாகவும் உள்ள பாதையில் செல்வார்கள்.
தேவனே நீர் அந்தப் பாதையை மென்மையாக்கி
    எளிதாக செல்லும்படிச் செய்கிறீர்.

Read full chapter