Add parallel Print Page Options

பிறகு, புதிய அரசர் வருவார்.
    அந்த அரசர் தாவீதின் குடும்பத்திலிருந்து வருவார். அவர் உண்மையுள்ளவராக இருப்பார்.
    அவர் அன்பும் கருணையும் உள்ளவராக இருப்பார்.
அந்த அரசர் சரியாக நியாயந்தீர்ப்பார்.
    அவர் சரியாகவும் நல்லதாகவும் உள்ளவற்றையே செய்வார்.
மோவாபிலுள்ள ஜனங்கள் பெருமையும் மேட்டிமையும் கொண்டவர்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டோம்.
    அவர்கள் பிடிவாதமும் தற்பெருமையும் உடையவர்கள்.
    அவர்களின் தற்பெருமைகள் வெற்று வார்த்தைகளாக உள்ளன.
மோவாப் நாடு முழுவதுமே இந்த அகங்காரத்தால் துன்புறும்.
    மோவாபிலுள்ள அனைத்து ஜனங்களும் அலறுவார்கள், ஜனங்கள் துக்கம் அடைவார்கள்.
அவர்கள் கடந்துபோன காலத்தில் தாங்கள் கொண்டிருந்தவற்றின்மேல் ஆவல் கொள்வார்கள்.
    அவர்கள் கிராரேசேத் ஊரில் செய்யப்பட்ட அத்தி அப்பங்களை விரும்புவார்கள்.

Read full chapter