Add parallel Print Page Options

தேவன் எரேமியாவை அழைக்கிறார்

கர்த்தருடைய வார்த்தை எரேமியாவிற்கு உண்டாகி, அவர்,

“உனது தாயின் கருவில் நீ உருவாக்கப்படுவதற்கு முன்பே
    நான் உன்னை அறிவேன்.
நீ பிறப்பதற்கு முன்பு
    உன்னதமான வேலைக்கு உன்னைத் தேர்ந்தெடுத்தேன்.
    நாடுகளுக்குத் தீர்க்கதரிசியாக நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்” என்றார்.

பிறகு எரேமியா, “ஆனால் சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, எப்படிப் பேசுவது என்று எனக்குத் தெரியாது. நான் ஒரு சிறுவன்” என்றான்.

ஆனால் கர்த்தர் என்னிடம்,

“‘நீ சிறுவன்’ என்றுச் சொல்லாதே.
    நான் அனுப்புகிற எல்லா இடங்களுக்கும் நீ போகவேண்டும், நான் சொல்லுகிறவற்றை எல்லாம் நீ பேசவேண்டும்” என்றார்.
“எவருக்கும் பயப்படவேண்டாம், நான் உன்னோடு இருக்கிறேன்.
    நான் உன்னைக் காப்பாற்றுவேன்” என்றார்.
இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது.

பிறகு கர்த்தர் தனது கரத்தை நீட்டி எனது வாயைத் தொட்டார், கர்த்தர் என்னிடம்,

“எரேமியா, நான் எனது வார்த்தைகளை உனது வாய்க்குள் வைக்கிறேன்.
10 இன்று நான் உன்னை நாடுகளுக்கும், அரசுகளுக்கும் பொறுப்பாளியாக நியமித்திருக்கிறேன்.
    நீ வேரோடு பிடுங்கவும், இடிக்கவும்,
    அழிக்கவும், கவிழ்க்கவும்,
    கட்டவும், நாட்டவும் செய்வாய்” என்றார்.

Read full chapter