Add parallel Print Page Options

35 அவர்கள் தீமையான கிரியைகளைச் செய்யும்போது
    நான் அதற்குத் தண்டனையை வைத்திருப்பேன்.
அவர்கள் தவறானவற்றைச் செய்ததால் நான் அவர்களைத் தண்டிப்பேன்.
அவர்களின் துன்ப காலம் அருகில் உள்ளது.
    அவர்களது தண்டனை விரைவில் வரும்.’

36 “கர்த்தர் தமது ஜனங்களை நியாயந்தீர்ப்பார்.
    அவர்கள் அவரது வேலைக்காரர்கள், அவர்களுக்கு அவர் இரக்கம் காண்பிப்பார்.
அவர்களது வல்லமை போய்விட்டதை அவர் பார்ப்பார்.
    அவர்களில் அடிமைகளும், சுதந்திரமானவர்களும் ஏகமாய் உதவியற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை அவர் பார்ப்பார்.
37 பின்னர் கர்த்தர் கூறுவார்,
    ‘பொய்த் தெய்வங்கள் எங்கே இருக்கிறார்கள்?
    பாதுகாப்பிற்காக நீங்கள் ஓடிய “பாறை” எங்கே?

Read full chapter